சைவ வைணவ பக்தி இலக்கியங்கள்
2. சைவ வைணவ பக்தி இலக்கியங்கள்
முன்னுரை –
சங்க காலத்தில் தமிழகம் பல துறைகளிலும் சிறந்து விளங்கியது.
-
காரணம் ; சேர, சோழ , பாண்டியரின் நீதி வழுவா ஆட்சி
-
சமயம் தழைதோங்கியது
-
கி.பி.200-க்குப் பின் களப்பிரர் ஆட்சி
·
பாலி, பிராகிருதம்,வடமொழி முன்னுரிமை
·
சமணமும் பௌத்தமும் போற்றப்பட்டன
·
அரசாட்சியின் கொள்கையால் தமிழும் இந்து மதமும்
புறக்கணிக்கப்பட்டன
-
பல்லவர் ஆட்சி வந்தபின் மீண்டும் மாற்றம்
·
தமிழ்மொழியும் இலக்கியமும் புத்துணர்ச்சி பெற்றன
·
பக்தி கால மறுமலர்ச்சி
·
சைவமும் வைணமும் தழைத்தோங்கத் தொடங்கின
சைவ இலக்கியம்
-
சிவபெருமானை முழுமுதற் பொருளாய்ப் போற்றுவது சைவ சமயம்
-
மன்னர்களின் அரவணைப்போடும் அருளாளர்களின் படைப்புகளோடும்
சைவ சமயம் மீண்டும் புத்துணர்ச்சி
-
63 நாயன்மார்கள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தோன்றினர்
-
அவர்களுள் 27 அடியவர்கள் இயற்றிய பாடல்கள் சைவத்
திருமுறைகள் என வகுக்கப்பட்டன.
-
சிவபெருமானின் பெருமைகளும் அருளும் மக்களின்
எடுத்துக்கூறப்பட்டன
-
11-ஆம் நூற்றாண்டில்
தமிழகத்தை ஆட்சி செய்த இராஜ ராஜ சோழனின் ஏற்பாட்டில் நம்பியாண்டார்
நம்பி மூலமாக அடியவர்களின் பாடல்கள் 11 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன
-
பின்னர், நாயன்மார்களின் கதைகள் சேக்கிழார்
பெருமானால் திருத்தொண்டர் புராணமாக உருவானது
-
அதுவே 12-ஆம் திருமுறையாகவும்
சேர்க்கப்பட்டது.
பன்னிரு திருமுறைகள்
-
சைவ சமயத்தின் நற்பண்பினை உலகிற்கு உணர்த்துவன பன்னிரு
திருமுறைகள்
-
இந்நூல்கள் தோத்திரப் பாடல் தொகுப்புகள்
என்றும் கூறப்படுவதுண்டு
-
சிவபெருமானைப் போற்றிப் பாடப்பட்ட பாடல்கள் என்பதால்
பொதுவாக இதனை தேவாரம் என்கின்றனர்.
-
திருமுறை என்பதற்கு சிவநூல் என்றும், சிவனின் பேரருளைப் பெற வழிகாட்டும் நூல் என்றும் கூறலாம்.
நாயன்மார்கள்
-
சைவ சமயம் தழைத்தோங்க
அரும்பாடுபட்டவர்கள்
-
சிவபெருமானுக்கே தம் வாழ்வை அர்ப்பணித்தவர்கள்
-
சைவ சமயத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் நால்வர்
-
அவர்களைச் சமயக் குரவர்கள் எனச்
சிறப்பித்துக் கூறுவதுண்டு
-
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர், மாணிக்க வாசகர்
பன்னிரு திருமுறைகளும் அவற்றைப் பாடியவர்களும்
திருமுறை
|
பெயர்
|
பாடிய அடியார்
|
1,2,3
|
சம்பந்தர் தேவாரம்
|
திருஞான சம்பந்தர்
|
4,5,6
|
அப்பர்
தேவாரம்
|
திருநாவுக்கரசர்
|
7
|
சுந்தரர் தேவாரம்
|
சுந்தரர்
|
8
|
திருவாசகம் , திருக்கோவை
|
மாணிக்க வாசகர்
|
9
|
திருவிசைப்பா,
திருப்பல்லாண்டு
|
திருமாளிகைத் தேவர்,
சேந்தனார், கருவூர்த்தேவர்,
நம்பிகாட நம்பி, கண்டராதித்தர்,
வேணாட்டடிகள், திருவாலியமுதனார்,
புருஷோத்த நம்பி, சேதிராயர்.
|
10
|
திருமந்திரம்
|
திருமூலர்
|
11
|
பதினோறாம் திருமுறை
|
திருவாலவாயன்,
காரைகாலம்மையார்,காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடத் தேவர்,
இளம்பெருமான், அதிரா அடிகள்,
பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி. (இவரே இந்தப் பதினோறு திருமுறைகளையும் தொகுத்தவர் )
|
12
|
பெரிய புராணம் / திருத்தொண்டர் புராணம்
|
சேக்கிழார்
|
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
-
திருமாலைக் குறித்துப் பாடப்பட்ட பக்திப் பாடல் தொகுப்பு
-
கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை
ஆழ்வார்களால் பாடப்பட்டவை
-
10-ஆம் நூற்றாண்டில் நாதமுனிகள் இப்பாடல்களைத் தொகுத்து
நாலாயிரத் திவ்விய பிரபந்தம் எனப் பெயரிட்டார்.
-
இது நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது
-
முதலாயிரம், பெரிய திருமொழி, இயற்பா, திருவாய்மொழி
ஆழ்வார்கள்
-
திருமாலை முழுமுதற் கடவுளாகப் போற்றுவது வைணவம்
-
திருமாலின் அடியார்களை ஆழ்வார்கள் என அழைப்பர்
-
ஆழ்தல் என்றால் மூழ்குதல் என்று பொருள்
-
உலக இன்பங்களில் ஈடுபாடு கொள்ளாமல் திருமால் பற்றியச்
சிந்தனையிலேயே ஆழ்ந்து கிடப்போர் என்று ஆழ்வார்களைக் குறிப்பிடுவர்
-
வைணவ ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர்
-
இவர்கள் இயற்றிய பாடல்களே நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
ஆகும்.
(அ) முதலாயிரம்
1. பெரியாழ்வார் - திருப்பல்லாண்டு, திருமொழி
2.. ஆண்டாள் - திருப்பாவை,
நாச்சியார் திருமொழி
3. குலசேகர ஆழ்வார் - பெருமாள் திருமொழி
4. திருமழிசை ஆழ்வார் - திருச்சந்த விருத்தம்
5. தொண்டரடிப் பொடியாழ்வார் - திருமாலை, திருப்பள்ளியெழுச்சி
6. திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான்
7. மதுரகவியாழ்வார் -
கண்ணிநுண்சிறுதாம்பு
(ஆ) பெரியா திருமொழி
8. திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி, குறுந்தாண்டகம்
நெடுந்தாண்டகம்
(இ) இயற்பா
9. பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி
10. பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி
11. பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி
12. நம்மாழ்வார் - பெரிய திருவந்தாதி
(ஈ) திருவாய்மொழி
12. நம்மாழ்வார் - திருவாய்மொழி
Very good 👍😊
ReplyDeleteHindu endra sol 3 aam nutrandil illai thiruthavum
ReplyDelete