Posts

Showing posts from October, 2017

தமிழ்ச் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ்ச் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும் முன்னுரை _ தமிழர் வாழ்வில் கதைகள் சொல்லிச் சிறு குழந்தைகளின் கற்பனைத் திறனை            வளர்த்தல் மரபு. -     வளமான சிறுகதை படைப்புகள் பேச்சு வழக்கில் தோன்றினாலும் ஆரம்பத்தில் அவை பெரிய எழுத்து வடிவில் மக்களிடம் சேர்ப்பிக்கப் பட்டன. -     உதாரணம் – அல்லி அரசாணி மாலை , புலந்திரன் கதை , வீர அபிமன்யு , நல்ல தங்காள் கதை போன்றவை சிறுவர்களிடையே மிகப் பிரபலம். கருத்து -     19 – ஆம் நூற்றாண்டில் தமிழில் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டபின் , முதல் சிறுகதை நூல் பரமார்த்த குரு கதை ( வீரமா முனிவர் ) -     இதனைத் தொடர்ந்து கதாமஞ்சரி , ஈசாப்பின் நீதிக்கதைகள் , மதனகாமராஜன் கதை , முப்பத்திரண்டு பதுமை கதை , விவேக சாகரம் , மயில் இராவணன் கதை போன்றவை வெளியாயின. -     தமிழ்நாட்டில் பிரபலமாக விளங்கிய செவிவழிக் கதைகள் ; தக்காணத்துப் பூர்வக் கதைகள் , திராவிடப் பூர்வக் கதைகள் , திராவிட மத்தியக் காலக் கதைகள் என தொக்குக்கப்பட்டன. ( பண்டிதர் நடேச சாஸ்திரி ) -     அடுத்து , தெனாலி ராமன் கதைகளும் , மரியாதை ராமன் கதைகளும் தமிழில் பிரபலம

kertas peperiksaan contoh STPM Sem 1

                                                                                 A  பிரிவு   ( 30 புள்ளிகள் ) கருத்துணர்தல் B  பிரிவு ( 20 புள்ளிகள் ) கீழ்வரும் எல்லா வினாக்களுக்கும் விடை தருக . 6.    ( அ )   எச்சம்   என்பது என்ன ?                                  ( 2 பு ) ( ஆ ) கீழ்க்காணும் பெயரெச்சங்களை அடையாளம் கண்டு , அவற்றின் வகையினை எழுதுக                                                      (6 பு ) i.          மாதவி எழுதிய கடிதம் கோவலனின் கையில் போய்ச் சேரவில்லை . ii.         சான்றோர் எந்நாளும் அழியாப் புகழ் எய்தவே விரும்பினர் . iii.         காற்றிலே தவழ்ந்து வந்த இனிய பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது . ( இ ) கீழ்க்காணும் சொற்களைத் தனிப்பெயரடையாகவும் , கூட்டுப்பெயரடையாகவும் மாற்றி எழுதுக .                                             ( 4 பு ) i. இருள் ii.. அழகு 7.    கீழ்க்காணும் சொற்களில் ஏற்புடைய , வேற்றுமை உருபுகள் பொருத்தி வாக்கியங்களில் அமைத்துக் காட்டுக .